பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகள் மனந்தளர வேண்டாம்! தோல்வி என்பது வெற்றியின் தாய்! தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி! இன்று தோல்வி வந்தடைந்த, உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல்…
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம்நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி நம்மைத் தாலாட்டுகிறது.தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால்உலகத்தை வென்ற பெருமகன்இசைஞானி இளையராஜா அவர்களுக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!இந்தப் புவியையும்நம் செவியையும்இன்னும் பல்லாண்டுதன் தேனிசையால்நம் இசைராஜா ஆளட்டும்,இயற்கை அருளட்டும்!பேரன்பு வாழ்த்துகளுடன்.., – செந்தமிழன் சீமான்தலைமை ஒருங்கிணைப்பாளர்நாம்…
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி ஶ்ரீ அவர்கள் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் தமிழகத்தில் முதலிடமும், இந்திய அளவில் 42 வது இடமும் பெற்ற செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.மகளுக்கு எனது அன்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் சிறப்புற மக்கள் பணியாற்ற வேண்டுமென உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்! கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன்…
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவு மிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலித்தாய்களை உலகச் செவிலியர் நாளில்…
புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள என் தம்பி யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்! இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்து தன் தனித் திறமையால் வெற்றித்தடம் பதித்து , நம் செவிகளில் உற்சாகத்துள்ளலாய் ,ஆற்றுப்படுத்தும் ஆறுதலாய், நிமிர வைக்கும் நம்பிக்கையாய், உருக வைக்கும் காதலாய், ஊற்றெடுக்கும் தாலாட்டாய் தவழ்ந்து நம் வாழ்வின்…
என்னுடைய தம்பி பாலா அவர்கள் தயாரித்து, என் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ் அவர்கள் நடித்து வெளிவருகிற “விசித்திரன்” படத்தை பார்த்தேன். தம்பி ஆர்.கே.சுரேஷ் தனது நடிப்பில் மிகவும் தேர்ந்து, உருமாறி, மெருகேறி நடித்துள்ளதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். ஒவ்வொரு உடல்மொழியிலிருந்து, நடையிலிருந்து, முக அசைவிலிருந்து, உரையாடல் உச்சரிப்பிலிருந்து அத்தனையையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார். ஒரு பாட்டு, ஒரு சண்டை,…
வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும் காவல்துறையில், புரையோடிப் போயிருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறது, தம்பி தமிழ் இயக்கி நேற்று வெளிவந்திருக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம். 1982ம் ஆண்டில் காவல் பணிக்குத் தேர்வானவர்கள், பின்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த…
தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றியம் முழுக்க கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த கடந்த மே 7, 2020 அன்று தமிழ்நாடு முழுக்க மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் தன் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி…
புகழ் விண்ணைத் தொடும் அன்னைத்தமிழின் பெருமை போற்ற, அளவற்ற தமிழ்ப்பற்றோடு, தன் உலகத்தரம் வாய்ந்த இசையால், உணர்வெழுச்சிமிகுந்த பாடலைத் தந்திருக்கும் எனதன்பு சகோதரர் @arrahman அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! மூப்பில்லா தமிழே தாயே! எப்போதும் வாழ்க! – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி புகழ் விண்ணைத் தொடும்அன்னைத்தமிழின் பெருமை போற்ற,…
Hearty Congratulations to the Aam Aadmi Party on their Emphatic Victory in the 2022 Punjab Election who have won the hearts of millions of Sikhs whom I deeply adore! I congratulate the newly-elected Punjab CM, Bhagwant Mann, and the Party’s…